Wednesday, September 3, 2014

 சிதம்பர ரகசியமாஇப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....??

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல்,
புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....



(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

Friday, June 27, 2014

இன்றைய இந்த  நவீன் சிந்தை உள்ள இலங்கை தமிழ்  சமுகம்  சாதியவாதத்தினதும், யாழ்மைய வாதத்தினதும் ஆணிவேரை அடியோடு அசைக்க வேண்டும் புரட்சிகர புதிய சூழல் மலர வேண்டும்
காணொளி காண READ MORE ஐஅழுத்தவும்

மற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாதிய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம்  இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.
யாழ்ப்பாணத்து சூத்திர தேவதாசி மரபினர் பற்றி அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தனது The Exile Returned என்ற ஆங்கில  ஆய்வு நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு,தேவதாசி மரபல்லாத வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்..தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.
இந்த தேவதாசி வர்க்கத்தில் வந்தவர்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சி.என்
அண்ணாதுரை.இதை தான் அண்மையில் சுப்பிரமணியன்சாமி அறிஞர் அண்ணாதுரை ஒரு அரைப் பிராமணர் என்று கிண்டலடித்தார்.யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.
தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த சூத்திர வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஒரு தேவரடியார் தேவதாசி மரபில்வந்தவர்.அவர் தன் சாதிப் புத்தியை மற்றவர்களுக்கு காட்ட தவறவில்லை.இப்படியே ஆறுமுக நாவலரும்.
தேவதாசி மக்கள் எல்லாம் கோவிலோடு அதிகாரத்தோடு பிணைக்கப் பட்டிருப்பார்கள்.இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.இமுரன்பாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் வெளியே தெரியக்கூடியதல்ல.அக்காலங்களில் சில சமூகப் பிரிவினருக்கு கல்வி மறுக்கப் பட்டதற்ற்கு ஆதிக்கசாதியாகிய தேவதாசி வெள்ளாள முதளியார்களே காரணம்.இன்றுவரை இக்கட்டுரை எழுதப்படும் வரை இந்த உண்மைகள் ஒரு பொழுதும் ஒருவராலும் இலங்கையில் எப்பாகத்திலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(By Edgor Thurston.Book:Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது?
வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், அகம்படியர்,
மள்ளர் எனப்படும் பள்ளர்கள் (ஆதாரம் திரு.அருள்பிரகாசம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை,வெள்ளாளர்களுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமை)
செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
வெள்ளாளர் -4030
பறங்கிகள்——-477
பிராமணர்-1935
செட்டி ——— 1807
மடப்பள்ளி —12995
முஸ்லிம் —2166
பரதேசி வெள்ளாளர் (வெவ்வேறு நாட்டினராகிய பலசாதியிலிருந்து வந்தவர்கள்)— 1830
மல்லாகம சாதியினர் (சிங்கல மரபினர் ) — 1501
கரையார் —- 7562
வார்ப்படக்காரர் — 105
கொத்தனார் —- 47
Tuners — 76
Welper —50
கைக்கோளர் — 1043
சாண்டார் —- 2173
சாயக்காரர் —902
செவ்வியர் — 1593
பண்டாரம் —- 41
பரவர் — 35
தனக்காரர் — 1371
வெள்ளிக்கொல்லன் — 899
கருமான் — 904
தச்சர் — 1371
அம்பட்டர் — 1024
அட்மை ப்பெர்க்கர் — 18
வண்ணார் — 2152
முக்குவர் —2532
மலையாளி —210
கோவியர் — 6401
கொம்பனி நளம் — 739
மள்ளர் (பள்ளர்) —6313
பறையர் — 1621
துரும்பர் (பள்ளர்/மள்ளர் குலத்தவருக்கு துணி வெளுக்கும்
வண்ணார்) — 197
நேசவுக்காரர் — 272
காவேர செட்டி —18
தவசி — 437
நட்டுவன் — 22
எண்னை வாணுவர்
— 4
திமிலர் — 1291
பள்ளிவிலி —376
செம்படவர் — 40
கடையர் —970
நளவர் — 7559
குயவர் — 329
கப்பல் கட்டும் தட்சர் — 33
மறவர் – 54
குழி தோண்டுபவர் —408
பரம்பர் — 362
சுதந்திர அடிமை — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.
வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவருகின்றனர்

2.கோவியர் என்ற சாதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக சீர்கேடுகளை விழைவித்தவர்கள் கோவியர் அல்ல.ஆனால் யாழ்ப்பாண சாதிய சமூக சீர்கேடுகளுக்கு நன்கு துணை போனவர்கள் “சவம் காவிகள்” என அழைக்கப்படும் கோவியர்களே.இவர்களில் பெரும்பாலும் உழைத்துன்ணும் மக்களே உள்ளார்கள்.இருப்பினும் இவர்கள் செய்த மாபெரும் குற்றம் வெளியில் அம்பலப் படுத்த வேண்டும்.இவர்கள்(கோவியர்)
தமிழர்கள் அல்ல.அதுக்குரிய வரலாற்று ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள்  200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு
ஒரு கொத்து நெல்லுக்கு ஒவ்வொருவராக விற்று வாங்கப்பட்டவர்கள்.இவைகள் சரித்திரபூர்வ ஆதாரங்களோடு தான் எழுதுகிறோம்.இல்லை என்று மறுப்பவர்கள் எமக்கு தகுந்த ஆதாரங்களோடு எழுதலாம்.
இன்றும் வெள்ளாளர் என்று தம்மை அழைப்பவர்கள், கோவியர் சாதியினரை, தங்களின் பிணங்காவிகள் என்று சொல்வதை தான் காண்கிறோம். சரித்திரமும் அப்படிதான் சொல்கிறது.பேராசிரியர் கா.சிவத்தம்பி,மக்கள் எழுத்தாளர் கெ.டானியல் ஆகியோரின்  ஆய்வு நூல்களிலும் நடை முறை உண்மைகளிலுமிருந்து இது உண்மை என அறியலாம்.கோவியர் வெள்ளாள முதலிகளின்  கைக்கூலிகளாக நீண்டகாலம் செயல் பட்டவர்கள்.இவர்களின் பிரதான வேலை,வெள்ளாள வடுக முதலியார்களுக்கு ஒட்டுக் குழுக்களாக செயல்படுவது,உழைக்கும் மக்களின் நன்னீர்க்கிணறுகளுக்குள் நஞ்சு ஊற்றுவது,உழைக்கும் மக்களின் வீடுகளைக் தீவைத்துக்கொளுத்துவது போன்றவைகளே.அதுக்கு கூலியாக பள்ளர்,நளவர் சமூகங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட காணிகள் வழங்கப்பட்டது.இப்படியே கோவியர் சாதிகள் பணப்புழக்கமுள்ளவர்களாக மாறினார்கள்.
வெள்ளாளர் வேறு, வெள்ளாள முதலிகள் வேறு.வெள்ளாள  முதலிகள் எனப்படுபவர்கள் தெலுங்கு வடுகர் ஆவார்.இவர்கள் தமிழர்கள் அல்ல.வந்தேறிகள்.பொட்டுக் கட்டிகள் என அழைக்கப்படும் தேவதாஸி மரபினர்.பார்ப்பனர்களின் வைப்பாட்டி பிள்ளைகள் என்பதே சரி. இவர்கள் குறித்த வரலாறுகள் பிறருக்கு செல்லக் கூடாதென்பதற்காகவே தமிழ் குடிகளுக்கு கல்வி உரிமை அக்காலங்களில் மறுக்கப் பட்டது.வேறல்ல.


இவர்களோடு சேர்த்து வெள்ளாளர்களையும் வெள்ளாள முதலிகளையும் குழப்பிப் பார்க்கிறார்கள் வரலாறு தெரியாதவர்கள்.
யார் இந்தக் கோவியர்கள்? இவர்கள் தமிழர்களா?
இவர்கள்  200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு
ஒரு கொத்து நெல்லுக்கு ஒவ்வொருவராக விற்று வாங்கப்பட்டவர்கள்.இவைகளை சரித்திரபூர்வ ஆதாரங்களோடு தான் எழுதுகிறோம்.
ஆதாரம்:யாழ்ப்பாண சரித்திரம்
ஆசிரியர்:செ.இராசநாயகம் முதலியார்
பக்கம்:196   “1865 ஆம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்ப்ட்டு விற்காப்பட்டார்கள்.இவர்களே வட சிறைக் கோவியர் எனப்படுகிறார்கள்”.

ஆதாரம்:யாழ்ப்பாண வைபவ கௌமுதி(History Of Jaffna)
ஆசிரியர்:க.வேலுப்பிள்ளை
பிரிவு:வட மாகாணத்திலுள்ள சில இடப்பெயர்களின் வரலாறு
பக்கம்:15 வட சீமையிலிருந்து வந்து விலைப்பட்ட சிறைகள்  வட சிறைக்கோவியர் எனும் சிறப்புப் பெயரால் அறியப்பட்டனர்.அன்னவரே வடுகர் எனும் பெயரால் குறிக்கப்பட்டவராவார்.
கோவியரின் குத்து மீசையும் தோற்றமும்,  அவர்கள் முஸ்லிம்கள் என எண்ணத் தோன்றுகிறது.இல்லாவிடினும் அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை மறைக்கப்பட்ட சரித்திரத்திலிருந்து இங்கே தேடிக் கொண்டுவரப்பட்டுள்ளது.இதை வாசிப்போர் சரித்திர ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

.

தொடர்புடைய முன்னைய பதிவுகள்
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/1.htmlஇலங்கை தமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 1
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/2.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 2
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/3_4306.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 3
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/4_25.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 4
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/5.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 5
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/6_25.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 6

Friday, June 13, 2014

வல்லிறக்கோயில்(வல்லிற கோயில் பேச்சு வழக்கு) திருவிழா காலங்கள் பெரும்பாலும் சுத்து வட்டாரப் பொடியளுக்கு ஒரு சந்தோசமான காலம்தான். எனக்கு மட்டும் ஒரு சின்னப்பிரச்சினை. என்னெண்டு சொல்லிச் சொன்னால் என்ர ஊர் வந்து வல்லிறக் கோயிலுக்கும் தூரம், சந்நிதியானுக்கும் தூரம் எண்டு ஒரு நடுச்சென்ரர் ஊர். வீட்டுக்காரச் சனம் வல்லிறக்கோயிலுக்கோ சந்நிதியானுக்கோ திருவிழாக் காலத்தில விடாதுகள். திருவிழாக் காலத்தில நீங்கள் சாமி கும்பிட மாட்டியள் சாமினியத்தான் கும்பிடுவியள் எண்டு அடிக்கடி அப்பா சொல்லுவார். அதனால இந்த வெடிவால் முளைச்ச காலத்தில ஒரே ஒருக்கா சந்நிதிக்கும், வல்லிறக் கோயிலுக்கும் போன ஞாபகம் இருக்கு. அது பதினோராம் வகுப்பில. சின்னனில கனதரம் போயிருக்கிறன் எண்டுறது வேற விசயம். இப்ப அந்த வெடிவால் வயசில வல்லிறக் கோயிலுக்குப் போய்வந்த அனுபவம் பற்றிச் சொல்லுறன்.

அந்தமுறை வல்லிறக் கோயிலுக்குக் கட்டாயம் போறதுதான், தேர், தீர்த்தம் ரண்டு நாளும் போறது போறது தான், வேற கதைக்கே இடமில்லை எண்டு வீட்டில சொல்லியாச்சு. பதினாறு வயசாச்சு நான் ஒரு நாளும் சந்தோசமா இருக்கேல்ல எண்டு அம்மாட்ட சொல்லிக்கில்லி ஒப்புக்கொள்ள வச்சாச்சு. அம்மாவை ஓமெண்ட வைக்கிறதுதான் பெரும்பாடு. அம்மா ஓமெண்டால் அப்பரும் ஓம்தான். இப்பதான் அடுத்த சிக்கல். நான் கூடப் போக இருந்த பொடியள் சொல்லிப்போட்டாங்கள் வேட்டியோடதான் வரவேணும் எண்டு. எனக்கு சாறமே கட்டத்தெரியாது, இதுக்குள்ள வேட்டிய எங்க காட்டுறது? உள்ளானுக்கு மேல ஒரு காச்சட்டை போட்டு அப்பர் வேட்டி கட்டிவிட்டார். பெலிட் எல்லாம் போட்டு இறுக்கிக் கட்டி ஒரு தூணில கையப் பிடிச்சு சைக்கிள்ள ஏறி கேற்றடியில போய் நிக்க பொடியள் வந்து சேர்ந்தாங்கள்.

எங்கட ஊரில இருந்து வல்லிறக் கோயிலுக்குப் போகேக்க வழமையா மாலுசந்திக்குப் பிறகுதான் பயணம் களைகட்டும். மாலுசந்தியில தான் முதல் தண்ணீர் பந்தல் இருக்கும் நாங்கள் போற ரூட்டில. சக்கரத்தண்ணி, மோர் எண்டு சும்மா கலக்குவினம். மாலுசந்திக்குப் பிறகு வல்லுறக் கோயில் போய்ச் சேரும் வரையில இன்னும் கனக்க தண்ணீர்ப்பந்தல் இருக்கும். முக்கியமா உபயகதிர்காமம் தண்ணீர்ப் பந்தலில புட்டளை அண்ணைமாரும், நண்பர்களும் (ஹாட்லியில படிச்சவடியா) கொஞ்சம் நல்லா கவனிப்பினம், ஆரும் பெம்பிளைப் பிள்ளையள் தண்ணீர்ப்பந்தல் பக்கம் வராத வரைக்கும். தண்ணீர்ப்பந்தலில அடுத்த ஸ்பெசல் என்னெண்டா ஸ்பீக்கர் கட்டி, பொக்ஸ் பூட்டிப் பாட்டுப் போடுவினம். 96க்கு முன்னால மாலுசந்தி தண்ணீர்ப் பந்தலில் புரட்சிப் பாடல்களும், 96க்குப் பின்னால பக்திப்பாடல்களும் ஒலிக்கும். நானறிய அவையள் ஒருகாலமும் சினிமாப் பாட்டே போடேல்ல.

இப்பிடி இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டு, கோயிலுக்கு வாற பெம்பிளைப் பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு அந்த வருஷமும் தேர்த்திருவிழாவுக்குப் போனம். வடம் பிடிக்கிறது எண்டுதான் முடிவு. எனக்கு ஒரே நடுக்கம். 4ம் வகுப்பில வேட்டியோட குலனைப் பிள்ளையாரில வடம் பிடிக்கப் போய் நான் துகிலிழந்தது ஞாபகம் வந்தது. ஆனால் வல்லிபுரத்தான் என்னைக் கைவிடேல்ல..எங்களால வடத்துக்குக் கிட்டவே போக முடியேல்ல. ஆக தேருக்குப் பின்னால நடந்து நடந்து கொஞ்ச நேரத்தால தேர்களுக்குப் பின்னால நடக்கத் தொடங்கினம். அப்பத்தான் அந்த மனிசனைப் பார்த்தம். ஆள் ஒரு ஒல்லிப்பைத்தங்காய். காவி வேட்டி காடியிருந்தார். உடம்பெல்லாம் சந்தனமும் திருநீறும். மொட்டந்தலை. மனிசனை இதுக்கு முதல் ஒருக்கா சன்னதியில கண்ட ஞாபகம். ஆள் தேர் வாற வீதீலை இருந்த எல்லா கரண்ட் போஸ்ட்டிலயும் தலைய மோதுது. போஸ்ட் ஆடுற அளவுக்கு வேகமா பின்னுக்குப் போய் வலு வீச்சா வந்து மோதுது. கல் இருக்கிற இடமா பாத்து குட்டிக்கரணம் அடிக்குது. ஆனா சொன்னா நம்பமாட்டியள் பாருங்கோ, ஒரு சின்னக் கீறல் கூட அந்த மொட்டை மண்டேல வரேல்ல. அதுக்குப் பிறகு ஒரு நாள் அதே வேலைய இந்த மனிசன் சந்நிதியிலயும் செய்தது. எனக்கெண்டால் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

உங்களுக்கே தெரியும்தானே. திருவிழா எண்டால் இந்தக் கச்சான் காரர், கடலை காரர், இனிப்புக் காரர், மணிக்கடைகாரர், கூல்பார்காரர் எண்டு எல்லாரும் வந்து கடை போடுவினம்தானே கோயில்ல. அப்பிடித்தான் குணம், ராஜா அது இது எண்டு எல்லாக் கூல்பார்காரரும் கடை போட்டிருந்தினம். எங்களுக்கு அப்ப விளையாட்டுச் சாமான் வாங்கிற வயசில்லை எண்டபடியால் ஆளுக்கொரு ஸ்பெசல் குடிக்கலாம் எண்டு உள்ள போனம். அப்ப உவன் ஸ்ரீகாந்தன் சொன்னான் எடே ஆறு பேர் இருக்கிறம். மேசைக்கு மூண்டு பேர் இருந்து ஸ்பெசல் குடிச்சிட்டு ரண்டு தனித்தனி பில்லையும் வாங்கீட்டு, ஒரு பில்லுக்கு மட்டும் காசு குடுத்துட்டு ஓடிப்போவம் எண்டு. சொன்னனான் தானே வெடிவால் வயசெண்டு. எல்லாரும் ஓமெண்டாச்சு. ஆறு ஸ்பெசலுக்கு 180 ரூபாய். 2 பில் போட்டதால ஒரு பில்லுக்கு 90 ரூபா கட்டவேணும். நான் பில் கட்ட அந்த பில்லைக் காட்டி வெளியேறுவது எண்டு பிளான். ஆனால் பிடிச்சுப் போட்டாங்கள். பிடிச்சது ஒரு மூண்டு பேரை. நான் அவயளைத் தெரியாத மாதிரி பில்லுக்குக் காசு குடுத்துட்டு வந்துட்டன். ‘வேட்டிய விரிச்சுக் கொண்டு குந்துங்கோடா' அப்பிடி இப்பிடி எண்டு ஒரே ஏச்சு. அவங்களும் ஒரு மாதிரி பில்லுக்கு காசு குடுத்துட்டு வந்த பிறகு வீட்டை வரும்வரை ஒரே சிரிப்புதான்.

அடுத்த நாள் தீர்த்தம் பாருங்கோ. வல்லிறக்கோயில் தீர்த்தம் எவ்வளவு அருமையான ஒரு அனுபவம். எவ்வளவு சனம் எவ்வளவு சனம். அதுவும் அந்த ‘சக்கரம் சக்கரம் சங்கு சக்கரம்' எண்டு சொல்லிக்கொண்டு சங்கு சக்கரத்தோட அந்த நாலு இளந்தாரியள் ஓடேக்க சனம் முழுக்க பக்திப்பரவசத்தில மெய் மறந்து போய்விடும். பிறகு அந்தத் தீர்த்தமாடின தண்ணி உடம்பில படோணும் எண்டு ஒரு நெரிசல் வரும்பாருங்கோ, அதைச் சொல்லவும் வேணுமே. ஒரு சோகம் என்னவெண்டால் அந்த வல்லிறக்கோயில் கடல் ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் ஒராளை பலி எடுக்கிறதா சொல்லிறவை, உண்மை பொய்யைப் பற்றித் தெரியாது. இரண்டாம் நாளும் சந்தோசமாப் போய் கச்சான், கடலை, இனிப்பு, தொதல் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டம். என்ன கூல்பார் பக்கம் போகத்தான் பயமாயிருந்தது. அந்த வருஷத்தின் ரண்டு நாளிலையும் நான் செய்த சாதனை என்ன தெரியுமோ, வேட்டி அவிழாமல் கோயில் வீதிகளில நடந்தது மட்டுமில்ல, வீடையிருந்து கோயிலுக்கும், கோயிலிலையிருந்து வீட்டுக்கும் சைக்கிள் ஓடேக்கையும் வேட்டி அவிழாமல் பாதுகாத்தது தான்.

குறிப்புக்கள்
வல்லிறக் கோயில்: வல்லிபுர ஆழ்வார் கோவில்
சந்நிதியான்: தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்
நடுச்சென்ரர்: மத்தியில் உள்ள ஒரு இடம் அல்லது புள்ளி. நடுமத்தி என்றும் சொல்லுவார்கள். நடு, மத்தி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை தானே?
வெடிவால் முளைச்ச: பதினம வயதில் உள்ள பிள்ளைகளை நோக்கிப் பெரியவர்கள் பாவிக்கும் ஒரு சொல். இதற்குப் பருவமாற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அர்த்தம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்
சின்னனில: சிறு வயதில்
கனதரம்: பல தடவைகள்
வடம்: தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் பலமான, பாரிய, நீண்ட கயிறு
வடம் பிடிக்கிறது: தேர் இழுப்பது. தேர்த்திருவிழா அன்று எப்படியாவது தேர் இழுக்கப்படும் சமயத்தில் வடக்கயிறைத் தொட வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் சொல்வார்கள். ஏனென்று தெரியாமல் நானும் செய்து வந்திருக்கிறேன்.
கரண்ட் போஸ்ட்டிலயும்: மின் கம்பங்கள். மின்சார வாரியத்தின் மின் கம்பிகளைக் காவும் சீமெந்தில் செய்யப்படும் பலம் வாய்ந்த தூண்கள்
ஒல்லிப்பைத்தங்காய்: மிகவும் ஒல்லியான தோற்றமுடைய மனிதர்களை பயற்றங் காய்க்கு ஒப்பிடுவார்கள். சில இடங்களில் புடலங்காய் பயன்பட்டதாகவும் அறிகிறேன்.
மொட்டந்தலை: இதுவும் சொல்லியா தெரிய வேண்டும்? மொட்டைத் தலை.
வலு வீச்சா: மிகவும் வேகமாக, மிக விரைவாக
கச்சான்காரன்/காரி,கடலைகாரன்/காரி: திருவிழா நாட்களில் சின்னதாகக் கடை விரித்து கச்சான், மஞ்சள் கடலை போனறவற்றை விற்பவர்கள்.
இனிப்புக்காரர்: அநேகமாக ரோசாப்பூ நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் சீனிப்பாகை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளையும், தொதல், தேன்குழல், பூந்தி போற இனிப்புகளையும், கொஞ்சம் பகோடா, உப்புக் கடலை போன்றவற்றையும் விற்பவர்கள்.
மணிக்கடைகாரர்: இவர்கள் அனேகமாக சிறுவர்களுக்கான விளையாட்டுச் பொருட்களை விற்பார்கள். பெரும்பாலும் இவர்களின் சந்தை சிறு பிள்ளைகளோடு வரும் பெற்றோரை நோகியதாய் இருப்பினும், இள வயது ஆண்களும் பெண்களும் கூட இவர்களை மொய்ப்பார்கள். கழுத்தில் போடும் கறுப்பு நிறக்கயிறு போன்ற இளைஞர்களுக்கான பொருட்களும், கண்ணாடிக் காப்பு போன்ற இளைஞிகளுக்கான பொருட்களும் இவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தருவதுண்டு.
கூல்பார்காரர்: ஐஸ்கிரீம் அல்லது குளிர்களி மற்றும் அது சம்பந்தமான பொருட்களை விற்போர்.
ஸ்பெசல்: பழங்கள், ஜெலி, பொடியாக்கப்பட்ட கச்சான் அல்லது கஜூ கொஞ்சம் கொக்கோ பவுடர் எல்லவற்றையும் கலந்து தரப்படும் ஒரு ஐஸ்கிரீம். மேற்படி கூல்பார்களில் விலை உயர்ந்த பொருள் இதுதான். அப்போது 30 ரூபாய். கிளிநொச்சி பாண்டியன் உணவகத்தில் மட்டும் ஒரு ‘மீனம்' ஸ்பெசல் 200 ரூபாய்.
இளந்தாரியள்: இளைஞர்கள்
ஓடேக்க: ஓடும் போது. இதே ‘ஓடேக்க' என்ற சொல் ஓடையினுள் என்ற அர்த்தத்திலும் பயன்படும். அதேபோல் வரேக்க- வரும்போது, போவேக்க- போகும் போது போன்ற சொற்களும் பயன்பாட்டில் உண்டு. இதே சொற்களை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் 'போவாக்க' 'வராக்க' என்று உச்சரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
படோணும்: பட வேண்டும்.
அனுபவம், ஈழப்பேச்சு, வட்டார வழக்கு, வ‌ட்டார‌ச்சொல் | comments (7)
தேர்த்திருவிழா Author: வர்மா•9:09 AM
விடிந்தால் நல்லூர்தேர்.வருடாந்த நிகழ்ச்சிகளில் நல்லூர் தேர் தீர்த்தமும் அடக்கம். வெட்டையில் விளையாடும்போதே நாளைக்கு நீயும் நானும் தனிச்சு நல்லூர் தேருக்குப்போவம் எண்டு அண்ணா சொன்னார். அண்ணா பெரியம்மாவின் மகன். ரண்டுபேரையும் தனிச்சு நல்லூருக்கு விடுவினமா என்ற சந்தேகம். அண்ணாவை அண்ணண்ணா எண்டுதான் சொல்வேன். அண்ணண்ணா தனிச்சுப்போவதில் உறுதியாக இருந்தார். ரண்டுவீட்டிலையும் கதைச்சு அனுமதி வாங்கியாச்சு.

கோயிலுக்குப்போறதுக்கு எதுக்கு அனுமதி எண்டு யோசிக்கிறியள். அப்போ எனக்கு 10 வயசு. அண்ணண்ணாவுக்கு 11 வயசு. காலையில் 5 மணிக்கு குளீத்துவிட்டு ரண்டுபேரும் வேட்டி சால்வையுடன் சட்டை இல்லாமல் கோயிலுக்கு வெளிக்கிட்டம். பஸ்ஸுக்கு,கோயில் உண்டியலுக்கு, அர்ச்சனைக்கு கைச்செலவுக்கு காசுதந்தார்கள். நெல்லியடி பஸ்நிலையத்துக்கு ரண்டுபேரும் போனோம். 6 மணீக்கு கோயிலுக்குப்போறசனம் கனக்க நிண்டது.

பருத்தித்துறையில் இருந்து வரும் பஸ் நிறையசனம். நெல்லியடியில் இருந்து ந‌ல்லூர் 20 மைல் இருக்கும். ப‌ஸ் ஒன்றும் யாரையும் ஏத்த‌வில்லை.யாரும் இற‌ங்க‌வேண்டு மென்றால் ப‌ஸ்நிலைய‌த்துக்கு தூரத்திலைநின்று இற‌க்கி விட்டிட்டுப்போகும். க‌ஸ்ர‌ப்ப‌ட்டு ஒருப‌ஸ்ஸிலை இட‌ம் கிடைத்த‌து.ப‌ஸ்ஸுக்குள் கோயிலுக்குப் போகும் ச‌ன‌ம்தான் அதிக‌ம்.

முத்திரை‌ச்ச‌ந்திவ‌ந்த‌தும் கோயிலுக்குப் போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்க ஆய‌த்த‌மான‌து. நானும் இற‌ங்க‌ ஆய‌த்த‌மானேன். இற‌ங்க‌வேண்டாம் என்று அண்ண‌ண்ணா சைகை காட்டினார். கோயிலுக்குப்போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. நால‌ஞ்சுபேருட‌ன் ப‌ஸ் யாழ்ப்பாண‌ம் நோக்கிப்போன‌து. கோயில் அலார் மெல்ல‌மெல்ல‌ குறைஞ்சு போச்சு.

யாழ்ப்பாண‌ம் ப‌ஸ்நிலைத்தில் ப‌ஸ் நின்ற‌தும் நாங்க‌ளூம் இற‌ங்கினோம். என்னை அவ‌ச‌ர‌மாக இழுத்துச்சென்ற அண்ண‌ண்ணா ராணி தியேட்ட‌ரின் முன்னால் நின்றான். ராணி தியேட்ட‌ரில் த‌வ‌ப்புத‌ல்வ‌ன் ப‌ட‌ம் ஓடுகிற‌து. தியேட‌ரின் முன்னால் க‌ன‌ச‌ன‌ம் . தியேட்ட‌ருக்கு மேலால் சிவாஜியின் பெரிய‌க‌ட்ட‌வுட். ம்ணிய‌த்தின் கைவ‌ண்ண‌த்தில் சிவாஜி என்னைப்பாத்து பேசுவ‌து போலிருந்த‌து.

நெல்லிய‌டியிலிருந்து யாழ்ப்பாண‌ப்போக‌ 55ச‌த‌ம்.க‌ல‌ரி 55ச‌த‌ம் .அரை ரிக்கெற் காசுஞாப‌‌க‌மில்லை.8 ம‌ணிக்கு ப‌ட‌ம் தொட‌ங்கிய‌து. ப‌ட‌ம் முடிய‌ந‌ல்லூருக்குப்போய் தேர் பாத்தோம்.தேருக்குப் போய் ப‌ட‌ம் பாத்த‌து யாருக்கும் தெரியாது. ந‌ல்ல‌பிள்ளைக‌ளாக‌ வீட்டுக்குப்போனோம்.

ஊரிலுள்ள‌ கோயிலுக‌ளூக்கு சேட் இல்லாம‌ல் போற‌துப‌ற்றி கொழும்பிலை சொன்னால் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

த‌ம்பியின் ம‌க‌ன் கொழும்பில் பிற‌ந்து கொழும்பிலே ப‌டிக்கிறான். ச‌ம‌ய‌பாட‌ம் ப‌டிப்பிக்கும் ப‌டி த‌ம்பி என்னிட‌ம் அனுப்பினான்.3ஆம் வ‌குப்பு ச‌ம‌ய‌ப்புத்த‌க‌த்துட‌ன் ப‌டிக்க‌வ‌ந்தான்.
கோயிலுக்கு எப்ப‌டிபோவ‌து என்று கேட்டேன்.

குளிச்சு நீட்டாட்ர‌ஸ்ப‌ண்ணீட்டு ச‌ப்பாத்து போட்டு ம‌ட்சா போக‌ணும் என்றான்.

வெட்டை ,,,,,,,,,,,,,,,,,,,,,மைதான‌ம்.
நீட்டா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுத்த‌மாக‌
ம‌ட்சா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அழ‌காக‌
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் "பறை" எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில...

"பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

"பறைசாற்றுதல்" எனும் சொல்லும் "பறை" எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. இவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த "பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்

தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த "பறை" எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்

அதேவேளை "பறை" எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற" என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான "பறையர்" எனும் தமிழ் சொல், சிங்களத்தில் "பெறவா" என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த "பெறை" இசைக்கருவியை அடிப்பவர்களை "பெறக்காரயா" என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த "பறை" எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் "பெறக்காரயா" என்பதில் உள்ள "காரயா" எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள "காரன்" எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட "பறை" எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த "Pariah" வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....( நன்றி,, அருண் )

Monday, March 3, 2014

கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும் இந்தப் போட்டிக்கு அமெரிக்காவும், இலங்கையும் எதிரெதிராக தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தில் வெற்றிபெறப்போவது யார் என்பதில்தான் போட்டி!

உண்மையான கயிறிழுவை விளையாட்டில் இருபுறமும் சமஅளவிலான ஆள் பலத்தை கொண்டே அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பார்கள். ஆனால் மனித உரிமை பேரவையில் இடம்பெறவிருக்கும் போட்டியில் எத்தனை நாடுகள் இருபுறமும் இணைகின்றன எனபதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகிறது.

அந்தவகையில், இலங்கையின் போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன, எதிராக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன என்பதிலேயே கயிறிழுப்பின் முடிவு தங்கியுள்ளது.

உலகின் அதிசக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தீர்மானத்துக்கு எதிராக போட்டி போட இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. இறுதியாக இடம்பெற்ற இரண்டு தீர்மானங்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்த போதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவு செய்யாமல் இலங்கை அரசு தட்டிக்கழித்திருந்தது.

இருந்த போதும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் சர்வதேசத்தால் எடுக்கப்படாத நிலையில், வெறும் வார்த்தைகளாலான அழுத்தங்கள் மட்டுமே பிரயோகிக்கப்பட்டு வந்தன. நிலைமைகளை ஆராயவென்று பல இராஜதந்திரிகள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள்.

வந்தவர்கள் பலரையும் சந்திப்பார்கள், தமக்கு தோன்றியதை சொல்வார்கள், கவலையை மட்டுமே வெளியிடுவார்கள். திரும்பியபின் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள், அவ்வளவுதான். இது இலங்கை அரசுக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ, மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட துணிந்து அதற்கு முகம் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும்.

ஆனால், தாங்கள் நினைப்பதுபோல் இம்முறைத் தீர்மானம் மேலோட்டமாக இருந்துவிடப் போவதில்லை என்பதை இலங்கை அரசு தற்போது உணரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமக்கு பாதகமாக வரக்கூடிய பல்வேறு தளங்களையும் ஊடுருவி, அவற்றை சரிசெய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாதங்கள் மட்டுமே காலக்கெடு இருப்பதால், அங்கத்துவ நாடுகளை இப்போதே வளைத்துப் போடும் முயற்சியாக அரச உயர்மட்ட பிரதிநிதிகள் சர்வதேசமெங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். அந்த விடயத்தில் ஜனாதிபதி மகிந்தாவும் நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார்.

பொய்யான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டுசென்று சர்வதேசத்தை மயங்க வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அத்தகைய ஒரு பொய்யான தகவலை மகிந்தாவே கடந்தவாரம் வெளியிட்டு வைத்துள்ளார்.

புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைக்க வடபகுதி சென்ற மகிந்த, அங்கு பேசும்போது “பன்னீராயிரம் படையினர் மட்டுமே வடபகுதியில் நிலை கொண்டுள்ளனர்” என்று சொல்லியதன் மூலம் சர்வதேசத்தையும், வடபகுதி மக்களையும் முட்டாள்களாக்கப் பார்த்துள்ளார்.

காணாமல் போன உறவுகளை தேடியும், சொந்த நிலங்களை கேட்டும் போராடும் தமிழ் மக்களை இராணுவப் பலம்கொண்டு தடுக்கும் இலங்கை அரசு, மேற்கத்தைய நாடுகளில் வாழும் சிங்கள மக்களையும், விலைக்கு வாங்கப்பட்ட தமிழர்களையும் கொண்டு அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக போராட்டம் நடாத்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகிறது.

அவற்றுக்கு அனுமதியளிக்கும் அந்தந்த நாடுகளின் மனிதாபிமானத்தையும், மனித உரிமைகளையும் இலங்கை அரசு கடைப்பிடித்தாலே இனப்பிரச்சினையில் பாதி தீர்ந்துவிடும். அதோடு, சர்வதேசத்தின் தலையீடும் குறைந்துவிடும் என்பதை ஏன் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையோ தெரியவில்லை.

சர்வதேசத்தின் பார்வையை திசை திருபப்பும் பல நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகின்றபோதும், ஈழத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை,மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வேண்டுகோள்கள் என்பவற்றை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் பல முட்டுக்கட்டைகளை தமிழ் மக்களுக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய ஒரு நிலை இருக்கும்போதே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எல்லை மீறியவையாகவே இருக்கையில், கூட்டத்தொடரின் பின் வடமாநில அரசு என்று ஒன்று இருக்குமா? என்ற சந்தேகம்தான் எழுகிறது.

உள்நாட்டில், தமது அதிகார பலத்தின் மூலமே எதையும் சாதிக்க நினைக்கும் இலங்கை அரசு, தமக்கு துணையாக இருக்கும் சீனா, ரஸ்யா, யப்பான், அரபு நாடுகள், ஆசிய நாடுகள் என்பன இருக்கும் துணிவில்தான் அமெரிக்காவையே எதிர்க்கத் துணிந்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக காட்டமான கருத்துக்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா, மட்டக்களப்பில் வைத்து வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு அவர்களது துணிச்சல் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அதன் பின் விளைவுகளை பெறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஈழத் தமிழர்களின் நீண்டகால துன்ப துயரங்களை சர்வதேசம் அறிந்தே வைத்துள்ளது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அது தொடரும் நிலையை மாற்றியமைக்கும் பெரும் பணியை சர்வதேசமே முன்னெடுக்க வேண்டும்.

கடந்த முறைகளைப்போல் நழுவலான ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதில் எந்தப் பலனும் இல்லை. சாதாரண அழுத்தத்தைகூட இலங்கைக்கு கொடுக்காத தீர்மானங்களாகவே அவை அமைந்துவிட்டன.

இம்முறை கொண்டுவரப்படும் தீர்மானமாவது வெறும் வாக்கெடுப்பாக மட்டுமே இருந்துவிடாமல், ஆக்கபூர்மாக அமைய வேண்டும் என்பதே எல்லோரதும்  எதிர்பார்ப்பு ஆகும்
எங்கே வெற்றி எங்கே தோல்வி என ஆராயும் புலம் பெயர் தமிழ் தலைமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் தமிழ் மக்களை பிரித்துவிட எடுக்கும் முயற்சியானது யாருக்காக? எதற்காக? எதை செய்கின்றோம்! என்பதும், அரசாங்கம் இதுவரை காலமும் போல் தற்போது செயல்பட முடியாத நிலையில் திக்குமுக்காடிப் போயுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல் சில இணையங்களும் சிங்களத்திற்கு நம்பிக்கை ஊட்டி, அரசாங்கத்தை ஊக்கப்படுத்துகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நகர்வு பிழை எனக் கூற எந்த அமைப்பிற்கும் மட்டுமல்ல, தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூட தகுதி இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சகல தரப்பையும் மதித்து செயல்படுவது இவர்கள் யாருக்கும் புரியாதது போல் அறிக்கை விடும் புலம் பெயர் அமைப்புக்கள், சர்வதேச நகர்வு அத்தனையும் தாம் செய்வதாகவே எண்ணுகின்றார்கள், யதார்தம் ஒரு இன விடுதலைக்கான காரணங்களையும் தேடல்களையும் கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக மக்கள் செயல்படுகின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களை யார் காப்பார்றுவார்கள் என கேள்விகளோடு அறிக்கை விடும் ஊடகங்கள் இது வரை காலமும் புலம் பெயர் மக்களையும், எமது விடுதலைப்போராடத்தையும் தவறாக கையாண்டு சுயநலன் தேடிய அமைப்புக்கள், மற்றும் ஊடகங்கள் தம்மை இனியாவது மாற்றி கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயக விடுதலைக்காக எதனை எதிர்பார்கின்றதோ, அதனை மட்டும் இவர்கள் செய்தால் அதுவே இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஈழத் தமிழினம் விடுதலை பெறுவதற்கான முக்கியமான விடயங்களில் ஒன்றாக அமையும் .

விடுதலைப் புலிகள் அமைப்பானது, தம்மை வளர்த்துக்கொண்டு தான் அடுத்தவர்களுக்கு தமது கோரிக்கைளை முன்வைத்தார்கள் ஆனால் எமது தாயக மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்குவதற்கு புலம் பெயர் அமைப்புக்கள் இப்படி கேவலமாக செயல்படும் என யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது.

மக்களது கடமை எதிர்பார்ப்புதான் வரலாற்றினது சந்தர்ப்பம், அதற்கான நகர்வு உண்மை வழிகளில் மட்டும்தான் அடையாளம் காண முடியும். அதனை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமை செயல்பாட்டுத்திறன் ஒரு முதல் அமைச்சரை தெரிவாக்கி உள்ளது.

அது கருணா போன்றவர்களுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்கலாமே தவிர, தமிழ் தேசியத்திற்கும் கடந்த கால உயிர்த் தியாகங்களையும் நெஞ்சில் சுமந்து தினமும் விடுதலைக்காக ஏங்கும்மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும் என்பதே மக்களது நம்பிக்கை ஆகும்.

அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் சர்வதேச நாடுகளிடம் வழங்கியுள்ள சாட்சியங்கள் உளிட்ட வாக்குமூலங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தாயக பிரஜைகள் குழு ( சிவில் அமைப்புக்கள்) மற்றும் புலம்பெயர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரின் ஆக்கபுர்வமான செயற்பாடுகளால் ஜெனிவாவில் தமிழர்களுக்கு வெற்றி நிட்சயம் என்பதனை வேத வாக்காக நம்பலாமே தவிர, புலம் பெயர் அமைப்புக்களது சுயநலவாதம் கொண்ட சத்தியத்தையும், தர்மத்தையும் மதித்து அல்ல என்பதே வரலாற்றுப் பதிவாகும்.

இவை மக்களது கருத்தாக என்றும் ஒலிக்கும்.

Friday, February 14, 2014


1939 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
ஓலங்கள் (மலையாளம்)
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதி லீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்
பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்
அவருக்கு எனது அஞ்சலிகள்

Monday, January 20, 2014


முன்னாள் போராளிகள் என்றதும் முதலில் முன்னர் படித்த நாவலொன்றின் சம்பவங்களே நினைவுக்கு வருவதுண்டு. அது உலகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ எழுதிய ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on Cross). அது கென்ய விடுதலைப் போராட்ட அனுபவங்களை சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல்.
கென்யாவை காலனித்துவத்திலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு மாவ் மாவ் என்னும் விடுதலை இயக்கம்(Mau Mau Revolt – 1952 – 1960) தலைமைதாங்கி வெற்றி பெற்றது. போராட்டத்தின் போது மிகவும் உயர்ந்த இடத்தில்இருந்த மாவ் மாவ் இயக்கப் போராளிகள், போராட்டத்தின் பின்னர் வாழ்வை கொண்டு நடத்த இயலாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டதை மிகவும் தத்ரூபமாக தியாங்கோ சித்தரித்திருக்கிறார். காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராடியவர்கள் பின்காலனித்துவ (Post- Colonialism) எஜமானர்களிடம் தங்கள் வாழ்க்கைக்காகயாசகம் செய்யும் இழி நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தை நாவல் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.

இந்த நாவலை படித்த காலத்தில் நமது சூழலில் அப்படியொரு நிலைமை வருமென்று எவரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் புதிர்கள் நிறைந்த வரலாற்று ஊர்வலத்தில் அனைத்தும் சாத்தியம்தான் என்பதைவிளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நமது அறிவுக் கண்களை வெற்றிக்களிப்பு என்னும் மாயமான் அலைக்கழித்திருந்தது. இப்போது எல்லாமே தெளிவாகத் தெரிகிறது ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான் விளங்கவில்லை.

இன்று தமிழ்ச் சமூகம் என்பது ஒரு பின்போர் சமூகம் (Post- war society) என்பதை எந்தளவிற்கு நமது  ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். யுத்தம் மிகவும் மூர்க்கமாக இடம்பெற்ற நிலங்களில் எல்லாம் இப்படியான நிலைமையை நாம் பார்க்க முடியும். இதனை ஒரு அமெரிக்க இணையம் மிகவும் சரியாக ‘யுத்தம் பழிவாங்கிய நிலம்’ (War- revenged land) என்று வர்ணித்திருக்கிறது.

இன்று நமது மக்களும் குறிப்பாக போரில் நேரடியாக அகப்பட்ட மக்களின் வாழ்நிலையும் இப்படியான ஒன்றுதான். பச்சையாகச் சொன்னால், தோல்வியடைந்த ஈழத் தமிழர் போராட்டம் ஒரு கையறு (Vulnerable Society) நிலைச் சமூகம் ஒன்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. இதில் எந்தவிதமான பினபலமுமற்ற ஏழை மக்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் மற்றும் அவர்கள்தம் குடும்பங்கள் வரை அடக்கம். ஆனால் இந்தப் பத்தி முன்னாள் போராளிகள் குறித்தே சில விடயங்களை சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றது.

இந்தப் பத்தி ஏன் முன்னாள் போராளிகள் குறித்து பிரத்தியேக கவனம் செலுத்த விழைகிறது? பொதுவாகவே ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே அதிகளவில் தங்களை இணைத்துக் கொள்வதுண்டு. இது இயக்கங்களுக்கான ஆளணி என்ற அர்த்தத்தில் எங்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. நமது சூழலை எடுத்துக் கொண்டால், ஈழத் தமிழர் அரசியல் மிதவாத தலைமைகளின் கைகளிலிருந்து ஆயுதரீதியான இயக்கங்களின் கைகளுக்கு மாறிய போது, அவற்றில் அதிகளவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே தன்னிச்சையாக இணைந்து கொண்டனர்.



அவர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் சிறுவயதில் கல்வியை பாதியில் விட்டுவிட்டு வந்தவர்கள். இவர்கள்சார்ந்த இயக்கங்கள் ஒவ்வொன்றினதும் வீழ்ச்சி இவ்வாறான பல்லாயிரக் கணக்கானவர்களை நிராதரவானநிலைக்குத் தள்ளியது. இதற்கு சிறந்த உதாரணம் புரட்சியின் மூலம் சமூகத்தை புரட்டியெடுக்கும் கனவுடன் போன பல EPRLF கீழ்மட்டப் போராளிகள் அதன் தலைமை தங்கள் குடும்பங்களுடன் ஓடியபின்னர் மேசனாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும் தங்கள் காலத்தை கழிக்க நேர்ந்தது. ஆனால் அங்கும் வசதியான குடும்பப் பின்னனிகளைக் கொண்டவர்கள், படித்தவர்கள் தாங்கள் சார்ந்த இயக்கங்களின் வீழ்ச்சிக்கு பின்னரும் தங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இன்று வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் அவ்வாறான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்களே! ஆனால் எதுவுமற்றவர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியுடன் கழிய நேர்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரேயொரு தனிப்பெரும் இயக்கமாக உருவெடுத்த பின்னர், அது பெரும் சாதனைகளை நிகழ்த்தியதாகச் சிலாகிக்கப்பட்ட காலத்தில் எல்லாம் அதன் ஆதாரமாக இருந்தவர்கள் அனைவரும் நாம் மேலே பார்த்த அந்த ஏழைகளின் புதல்வர்களும் புதல்விகளும்தான். இந்தக் காலத்தில் மதில்மேல் பூனையாக இருந்த தமிழ் மத்தியதர வர்க்கம் தங்களது பிள்ளைகளை படிப்பித்துக் கொண்டு ஏழைகளின் வெற்றிக்கு சீனவெடி போட்டுக் கொண்டிருந்தது.



இன்று அனாதரவாகியிருக்கும் போராளிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களை தங்கள் உறவுகள் என்று சொல்லிக் கொள்வதில் பலரும் பெருமைப்பட்டதுண்டு. அவர்களுடன் நின்று படம் எடுப்பதிலும் அதனை மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வதிலும் நம்மில் பலரும் முன் வரிசையில் நின்றனர். பிரபாகரன் ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் இன்று?
இன்று விடுவிக்கப்பட்ட போராளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். ஒரு புறம் மிகுதிக் காலத்தை எவ்வாறு வாழ்வது என்ற கேள்வி, மறுபுறம் சொந்த சமூகத்தாலேயே அன்னியமாகப் பார்க்கப்படும்நிலை என்று அவர்கள் பிரச்சனை தனித்துத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்களை தங்களது உறவுகள் என்று சொல்லிக் கொள்ள உறவினர்களே தயங்குகின்றனர். இதுபற்றி விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த உறுப்பினர் சொல்லும் போது, தனது சொந்த அக்காவே தன்னை வீட்டுப்பக்கம் வரவேண்டாமென்று கூறுவதாகக் குறிப்பிட்டார்.



விடுவிக்கப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் எவரும் முன்வருவதில்லை. இப்படியாக சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முன்னாள் போராளிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். விடுதலை வாங்கித்தரப் புறப்பட்டவர்கள் இப்போது ஒரு வேளை உணவுக்காக எப்படி போராடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையலாம்.



இவ்வாறானவர்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் பொறுப்பை யார் எடுப்பது? இந்த இடத்தில்தான் புலம்பெயர் சமூகம் குறித்து கேள்வி எழுகிறது. நமது புலம்பெயர் சமூகம் முன்னாள் போராளிகள் குறித்து உண்மையிலேயே என்ன கருதுகிறது? அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் இனி அவர்கள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லை என்று கருதுகிறதா?போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் புலம்பெயர் சமூகம் போரில் புலிகள் வெல்ல வேண்டுமென்னும் நோக்கில் பணத்தை வாரி வழங்கியது. வருடமொன்றுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவ்வாறு வழங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.



புலம்பெயர் சமூகம் புலிகளின் பின்தளமாக இருந்த காலத்தில்தான் அரசியல்ரீதியாக தமிழ்ப் புலம்பெயர் சமூகம்(Tamil Diaspora) என்னும் ஒரு விடயம் முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் சமூகத்தின் முக்கியத்துவத்தை அங்கு இயங்கிய தேசியவாதிகள் என்போர் மிகவும் குறுகிய அர்த்தத்திலேயே நோக்கி வந்தனர். தங்களது பங்களிப்பு என்பது வெறுமனே நிதியைக் கொடுப்பது மட்டுமே, அந்த நிதியைக் கொண்டு போராட வேண்டிய பொறுப்பு களத்தில் இருப்பவர்களுடையதாகும் என்ற மனோநிலையே அவர்கள் மத்தியில் இருந்தது. புலிகள் பலமாக இருந்த காலம் முழுவதும் அவர்களும் அவ்வாறானதொரு சிந்தனையைத்தான் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு ஊட்டியும் வந்தனர்.

ஆனால் இன்று புலிகள் களத்தில் முற்றாக அகற்றப்பட்டிருக்கும் சூழலில் சரணடைந்த போராளிகளை தேவையற்றவர்கள் என்று புலம்பெயர் தேசியவாதிகள் கருதுகின்றனரா என்ற சந்தேகமே எழுகிறது. பெரும்பாலான புலம்பெயர் ஊடகங்கங்களிலும் அவர்கள் குறித்த கரிசனை வெளிப்படவில்லை. இத்தனைக்கும் புலம்பெயர் சமூகம் என்று நாம் எல்லோரும் பிரஸ்தாபிப்பதற்கான அச்சாணியாக இருந்தவர்களே அவர்கள்தான். இது பற்றி ஆய்வாளர் திருநாவுக்கரசு புலம்பெயர் மக்களின் விருப்பங்களுக்காக வன்னி தொடங்கி வாகரை வரையான மூன்று லட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்ததாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. புலம்பெயர் தேசியவாதிகள் என்போர் தங்கள் பேரப்பிள்ளைகளைக் கூட பேணிக்கொண்டுதான் புலிகளை போரிடும்படி தூண்டினர். எனவே இன்று கையறு நிலையில் கிடக்கும் மக்களை புறம்தள்ளிவிட்டு அடுத்த கட்ட அரசியலை நோக்கிச் செல்லவதாகச் சொல்வது எந்தவகையில் பொருத்தமானதாக இருக்க முடியும்?



ஆனால் அனாதரவான போராளிகள், அவர்கள்தம் குடும்பங்கள் என்பவற்றை மீளமைக்கும் பாதையை நோக்கி புலம்பெயர் சமூகம் இனியாவது வரவேண்டும் என்பதைத்தான் இந்தப் பத்தி குறித்துரைக்க முயல்கிறது. புலம்பெயர் சமூகம் தனது முக்கியத்துவத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்ய வேண்டியிருக்கின்றது.

மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக  உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும். ஒரு வகையில் இது புலம்பெயர் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமது முன்னோர்களுக்குச் செலுத்தும் பிதிர்க்கடன் காணிக்கையாகும்